டில்லி:

புதிய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை மாற்ற திட்டம் மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) செயல்பட்டு வருகிறது. இக்கவுன்சில் நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்ட புத்தகங் களை விநியோகித்து வருகிறது.

தற்போது, புதிய தேசிய கல்விக் கொள்கையின் மாதிரி வடிவம் வெளியாகி, பொதுமக்கள் கல்வியாளர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகிறது. விரைவில் தேசியக் கல்விக்கொள்ளை இறுதி செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அதையொட்டி, நாடு முழுவதும்  என்சிஇஆர்டி பாடத்திட்டத்தையும் மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.   இதுதொடர்பாக  கல்வியாளர்கள் குழு ஒன்று இந்த மாத இறுதியில் அமைக்க மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, என்சிஇஆர்டி இயக்குநர் ஹிருஷிகேஷ், ஏற்கனவே ‘தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு 1975, 1988, 2000, 2005ல் மாற்றி அமைக்கப்பட்டது. தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது 5வது முறை என்று கூறியவர், புதிய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.