சபரிமலை:

பரிமலையில் இன்று காலை புதிய மேல்சாந்தி தேர்வு குலுக்கல் முறையில் நடைபெற்றது.

இன்று அதிகாலை 5:00 மணிக்கு சபரிமலை நடைதிறந்ததும் அய்யப்பன் கோவிலில் வழக்கமான பூஜைகள் நடைபெற்றது .

அதைத்தொடர்ந்து காலை 8:00 மணிக்கு புதிய மேல்சாந்தி குலுக்கல் தேர்வு நடைபெற்றது.  இதில் சபரிமலை மேல்சாந்தியாக உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி , மாளிகைபுரம் மேல்சாந்தியாக அன்னீஸ் நம்பூதிரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

உன்னிகிருஷ்ணன் வரும் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கு சபரிமலையில் தங்கி பூஜை செய்வார்.