சென்னை: வங்கக்கடலில் நாளை மறுதினம் (ஜூலை 11ஆம் தேதி)  புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. இது புயலாக மாறும் என்பதால், தமிழகத்தின் பல பகதிகளில்  கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய  வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி,  மத்திய மேற்கு வட மேற்கு, வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் இந்த காற்றழுத்தத் தாழ்வு உருவாகும். இந்த காற்றழுத்தம் புயலாக மாறும் வாய்ப்புகள் இருக்கிறதா மற்றும் எந்த திசையை நோக்கி நகரும் என்பது குறித்த விவரங்கள் அளிக்கப்படவில்லை. இதன் காரணமாக,  தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக்கத்தால்,  தென்மேற்கு ,வெஸ்ட் சென்ட்ரல் அரபிக்கடலில்  மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசும்.

லட்சத்தீவு பகுதி மற்றும்  கேரளா கர்நாடகா கடற்கரைகள் 60. கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் இந்த  பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மத்திய மேற்கு – வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதி, தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர பகுதிகள், தெலங்கானா மற்றும் தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் வாய்ப்புகள்  உள்ளன.

11,12ஆம் தேதிகளில் ஆந்திரா மற்றும் தமிழகத்தில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.