காத்மண்ட்:

நேபாளத்தைச் சேர்ந்த 49 வயதான ஷெர்பா எவரெஸ்ட் சிகரத்தை 23-வது முறையாக ஏறி சாதனை படைத்துள்ளார்.


காமி ரீடா ஷெர்பா என்பவர் கடந்த ஆண்டு எவரெஸ் சிகரத்தை 22-வது முறையாக ஏறி சாதனை படைத்தார்.

.850 மீட்டர் ஆகும். சொலுகும்பு மாவட்டம் தாமே கிராமத்தைச் சேர்ந்த ஷெர்பா புதன்கிழமை காலை 7.50 மணி அளவில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்.

உலகின் மிகப் பெரிய மலையான இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தை 23-வது முறையாக ஏறி சாதனை படைத்தார்.

கடந்த 1994-ம் ஆண்டு முதல் காமி ரீடா ஷெர்பா எவரெஸ்ட் சிகரத்தை ஏறி வருகிறார். இதன்மூலம் அவரது முந்தைய சாதனையை அவரே முறியடித்துள்ளார்.