லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனதாக சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டது.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதல்வயப்பட்டு ‘லிவிங் டு கெதரில்’ வாழ்ந்து வந்தனர்.

நயன்தாரா குழந்தை பெறுவதில் சிக்கல் இருப்பதாக இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே திரையுலக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜூன் 9 ம் தேதி ஈ.சி.ஆரில் ஆடம்பர திருமணம் செய்து படம் எடுத்துக் கொண்ட இந்த ஜோடி இரட்டைக் குழந்தைக்கு அப்பா – அம்மா ஆனதாக விக்னேஷ் சிவன் இன்று தன்னை பின்பற்றும் 18 லட்சம் பேருக்கு ட்விட்டர் பதிவு மூலம் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து வாடகைத் தாய்மூலம் இவர்கள் குழந்தை பெற்றதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

2021 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ம் தேதி அமலுக்கு வந்த இந்திய வாடகைத் தாய் சட்டத்தின் படி சட்டப்படி திருமணமான ஜோடி (21 வயதான ஆண் மற்றும் 18 வயதான பெண்) அல்லது 35 வயது முதல் 45 வயதுள்ள கணவனை இழந்த அல்லது விவாகரத்தான பெண் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.