சுக்மா,

த்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுக்கள்  மீண்டும்  வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த திடீர் தாக்குதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த  2 ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர்.

சத்திஸ்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுக்கள் ஆதிக்கம் கொடிகட்டி பறக்கிறது. அங்குள்ள சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகளுக்கும், எல்லை பாதுகாப்பு படையினருக்கும் இடையே அடிக்கடி மோதல் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுக்கள் வைத்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 2 மத்திய ரிசர்ப் படையைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் காயம் அடைந்தனர்.

பரியா கிராமத்தை ஒட்டியுள்ள வனப் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேர்லபால் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் சி.ஆர்.பி.எஃப் படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

வெடிகுண்டு விபத்தில் காயம் அடைந்த வீரர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உயிருக்கு ஆபத்து இல்லை கூறப்படுகிறது.

ஏற்கனவே இதே சுக்மா மாவட்டத்தில்தான் நக்சலைட்டுக்கள் நடத்திய அதிரடி தாக்குதல் காரணமாக  25 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.