சென்னை: இங்கிலாந்து & ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களில் சிறப்பாக செயல்பட்டதற்காக, தமிழ்நாட்டு வீரர் நடராஜனுக்கு மஹிந்திரா நிறுவனம் வழங்கிய ஜீப் வகை காரை, தனது பயிற்சியாளர் ஜெயப்பிரகாஷ் என்பவருக்கு பரிசளித்துள்ளார் நடராஜன்.

இங்கிலாந்துக்கு எதிரான அனைத்து தொடர்களையும், இந்தியா வென்ற நிலையில், நடராஜன் உள்ளிட்ட சிலருக்கு மஹிந்திரா நிறுவனம் சார்பில், ‘மஹிந்திரா தார்’ என்ற ஜீப் வகை கார் பரிசாக வழங்கப்பட்டது. இதற்காக, மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவிற்கு நன்றி தெரிவித்து, பதில் பரிசும் அனுப்பினார் நடராஜன்.

தற்போது, தனக்கு வழங்கப்பட்ட பரிசை, நன்றி கடனாக, தனக்கு கிரிக்கெட் பயிற்சியளித்த பயிற்சியாளர் ஜெயப்பிரகாஷ் என்பவருக்கு அளித்துள்ளார் நடராஜன். இச்செயல் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

“நடராஜனின் இச்செயல் தனக்குப் பெருமையளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார் ஜெயப்பிரகாஷ்.