டில்லி

ந்தியாவுக்கு வந்துள்ள நாசா நிர்வாக அதிகாரி பில் நெல்சன் இஸ்ரோ தலைவர்களை சந்திக்க உள்ளார்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ அமைப்புடன் இணைந்து அமெரிக்க விண்வெளி துறையான நாசா அமைப்பு பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இன்று, நாசா நிர்வாக அதிகாரியான பில் நெல்சன் இந்தியாவுக்கு இன்று வருகிறார்.

அவர் தனது எக்ஸ் வலைத்தளத்தில்,

“இந்தியாவில் வந்திறங்கியுள்ளேன். இஸ்ரோவுடனான நாசாவின் உறவை வளர்ப்பதற்கான ஒரு வாரகால கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்குத் தயாராக உள்ளேன். விண்வெளி துறையில் இந்தியா தலைவராகச் செயல்பட்டு வருகிறது. ஆக்கப்பூர்வ முறையில் இந்த பயணம் இருக்கும் என எதிர்பார்க்கிறேன்”

எனப் பதிவிட்டு உள்ளார்.

அவர் இதைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தில், இரு நாட்டு விண்வெளி அதிகாரிகளையும் அவர் சந்தித்துப் பேசுகிறார்.  சந்திப்பில், விரிவான அளவிலான புதிய கண்டுபிடிப்பு மற்றும் புவி அறிவியல் உள்ளிட்ட ஆராய்ச்சி தொடர்பான துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்தும் வகையில் பேச இருக்கிறார் என நாசா வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.