நாகப்பட்டினம்

மீண்டும் நாகப்பட்டினம் இலங்கை இடையே ஆன கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது.

கடந்த வருடம் அக்டோபர் 14 ஆம்தேதி நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்குப் பன்னாட்டுப் பயணியர் படகு போக்குவரத்து சேவை பிரதமர் மோடியால் காணொளி காட்சி மூலம் தொடங்கப்பட்டது. சீதோஷ்ண நிலை காரணம் காட்டி படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 

தற்போது வரும் மே மாதம் 13 ஆம் சிவகங்கை என்ற பெயர் கொண்ட வேறொரு பயணியர் படகு நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்குச் செல்ல உள்ளது  இங்கு ஏற்கனவே செரியாபாணி என்ற பயணியர் படகு இயங்கிய நிலையில் வேறொரு படகு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இதற்காகப் பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ள பயணியர் படகு கீழ் தளத்தில் 133 இருக்கைகளும், மேல் தளத்தில் 25 இருக்கைகளும் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது இதில் கீழ்தளத்தில் உள்ள இருக்கைகளில் பயணிக்க ஜிஎஸ்டி வரியுடன் 5000 ரூபாயும், மேல் தளத்தில் உள்ள சிறப்பு வகுப்பில் பயணிக்க ஜிஎஸ்டி வரியுடன் 7000 ரூபாயும் வசூல் செய்யப்பட உள்ளது. 

இந்த பயணியர் படகு அந்தமானில் தயாராகியுள்ளது. படகு மே 10 ஆம் தேதி நாகை துறைமுகம் வரவுள்ளது. இலங்கைக்கு வரும் இந்தியர்களுக்கு விசா கிடையாது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ள காரணத்தால், இந்த கப்பலில் இலங்கை செல்ல பாஸ்போர்ட் மட்டுமே போதுமானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்..