2021 ம் ஆண்டுக்கான தாதா சாஹிப் பால்கே விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற விழாவில் ரஜினிக்கு இந்த விருதை வழங்கினார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு.

தாதா சாஹிப் விருது வாங்கிய ரஜினிகாந்தை கௌரவிக்கும் வகையில் நடிகர் சங்கம் சார்பில் அவருக்கு பாராட்டு விழா ஏற்பாடு நடத்தப்பட்டது.

இந்த விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவில்லை என்ற போதும் வீடியோ மூலம் திரையில் தோன்றிய ரஜினி அதற்கு மன்னிப்பு கூறியதோடு தன்னை கௌரவித்த நடிகர் சங்கத்திற்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

அக்டோபரில் தாதா சாஹிப் பால்கே விருது விழாவைத் தொடர்ந்து உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஜினிகாந்த் அதன் பின் பல்வேறு காரணங்களால் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை பெரும்பாலும் தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.