க்னோ

காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி தீவார் பட வசனத்தை மேற்கோள் காட்டி என்னுடன் சகோதரிகள் உள்ளனர் என பதில் அளித்துள்ளார்.

 

வரும் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளன.   இதையொட்டி காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தீவிரமாகத் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றன.   குறிப்பாகக் காங்கிரஸ் சார்பில் பிரசாரம் செய்து வரும் அக்கட்சி பொதுச் செயலர் பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிட மகளிருக்கு 40% இட ஒதுக்கீடு அளித்தது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

பிரியங்கா காந்தி மகளிருக்குத் தொடர்ந்து பல சலுகைகளை அறிவித்து வருகிறார்.  அதில் ஒன்றாக மகளிருக்கான தேர்தல் அறிக்கையைச் சக்தி விதான் என்னும் தலைப்பில் நேற்று வெளியிட்டுள்ளார்.  இந்நிலையில் பிரியங்கா காந்தி தனது டிவிட்டரில் செய்தியாளர் தன்னிடம் பேசும் வீடியோ ஒன்றைப் பதிவேற்றம் செய்துள்ளார்.

அந்த வீடியோவில் செய்தியாளர், “உபி மாநிலத்தில் காங்கிரஸ் தனது அடிப்படையை இழந்து விட்டதாக எதிர்க்கட்சியினர் சொல்லி வருகின்றனரே, அது குறித்து நீங்கள் சொல்வது என்ன எனக் கேள்வி கேட்கிறார்.  அதற்குப் பிரியங்கா காந்தி அமிதாப் பச்சன் நடித்த தீவார் படத்தில் வரும் வசனத்தை மேற்கோள் காட்டி பதில் அளிக்கிறார்.

பிரியங்கா, “தீவார் படத்தில் அமிதாப் பச்சன் தனது சகோதரர் சசிகபூரிடம் என்னிடம் கார் உள்ளது, பங்களா, உள்ளது என அடுக்கிக் கொண்டே போவார். அப்போது சசிகபூர் என்னுடன் என் தாய் இருக்கிறார் எனப் பதில் அளிப்பார்.  இதைப் போல்  என்னுடன் உபி மாநில மகளிரான எனது சகோதரிகள் உள்ளனர் என நான் சொல்ல விரும்புகிறேன்” எனப் பதில் அளித்துள்ளார்.  இது மக்களை மிகவும் கவர்ந்துள்ளது.