சென்னை:

ள்ளாட்சி தேர்தலில் தீவிரமாக  பணியாற்ற வேண்டும் என்று சேலம் அருகே ஓமலூரில் இன்று காலை நடைபெற்ற அதிமுக  கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர்  எடப்பாடி அறிவுறுத்தினார். உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற கட்சி நிர்வாகிகள் முழுவீச்சில் செயல்பட வேண்டும் என்று கூறினார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் ஒன்றிய நகர கிளைச் செயலாளர்களுடன், உள்ளாட்சி தேர்தல் குறித்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.  அப்போது, சமீபத்தில் நடைபெற்று முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தலில் அதிமுக கட்சி  வெற்றி பெற்றதைப் போல உள்ளாட்சி தேர்தலிலும் 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும் என்றுவலியுறுத்தினார்.

அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைத்து வாக்குகளை பெற வேண்டும் என்றும் கூறினார்.