லண்டன் பக்கிங்காம்க்ஷயர் பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஸ்டோக் பார்க் மேன்ஷன் கட்டிடத்தை ரூ. 592 கோடி ரூபாய்க்கு முகேஷ் அம்பானி வாங்கி இருப்பதாக செய்தி வெளியானது.

இந்தியாவில் அடுத்த பொதுத்தேர்தல் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் நடைபெற இருப்பதால் அதன் முடிவு எப்படி இருக்கும் என்று நம்பமுடியாததால் லண்டனில் 49 படுக்கையறைகள் மற்றும் மருத்துவ வசதியுடன் கூடிய அரண்மனை போன்ற இந்த இடத்தை முகேஷ் அம்பானி வாங்கி இருப்பதாக பரபரப்பு கிளம்பியது.

அம்பானி குடும்பத்தினர் இந்த ஆண்டு தீபாவளியை இங்கு கொண்டாடியதாகவும், இனி அவர்கள் இந்தியாவுக்கும் லண்டனுக்கும் மாறி மாறி குடியிருக்கப்போவதாகவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதனைத் தொடர்ந்து, முகேஷ் அம்பானி இந்தியாவை விட்டு எந்த நாளும் வெளியேறமாட்டார், அவர் இந்தியாவில் தான் இருப்பார்.

லண்டனில் வாங்கி இருக்கும் இடம் வர்த்தக ரீதியாக விளையாட்டு மற்றும் தங்கும் விடுதியாக மாற்றியமைக்கப்படும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.