போபால்

த்தியப் பிரதேச புதிய முதல்வர் மோகன் யாதவ் தம்மைக் கட்சியில் சிறு தொண்டன் எனக் கூறி உள்ளார்.

மத்தியப் பிரதேச முதல்வர் யார் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. ஏற்கனவே சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக செயல்பட்டு வந்த நிலையில் அவருடைய அமைசரவையில் இடம்பெற்ற மோகன் யாதவ் முதல்-மந்திரி பதவிக்கு அறிவிக்கப்பட்டு உள்ளார்.

விரைவில் மோகன் யாதவ் முதல்வராக பதவியேற்கும் விழா நடைபெறும் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது 58 வயதாகும் மத்தியப் பிரதேச புதிய முதல்வர் மோகன் யாதவ்  செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர்,

“நான் கட்சியின் சிறு தொண்டன், நான் மாநில மற்றும் மத்திய தலைமை மற்றும் உங்கள் அனைவருக்கும், நன்றி தெரிவிக்கின்றேன். என்னுடைய பொறுப்புக்களை உங்களுடைய அன்பு மற்றும் ஆதரவால், நிறைவேற்றப் பெரிதும் முயற்சி செய்வேன்” 

எனக் கூறியுள்ளார்.