தெலுங்கானா:
தெலுங்கானாவில் புதுமாப்பிள்ளைக்கு மாமியார் இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் ப்ரித்வி குப்தா. இவருக்கு, கிழக்கு கோதாவரி பகுதியை சேர்ந்த ஹாரிகா என்ற பெண்ணுடன், சமீபத்தில் திருணம் முடிந்தது.

இந்நிலையில், சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு, ப்ரித்வி குப்தா, தனது மனைவியுடன் மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வந்த அவருக்கு பெரும் இன்ப அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அதாவது, தனது அன்பு மருமகனுக்காக, 173 வகையான உணவு வகைகளை சமைத்து, மாமியார் அசர வைத்துள்ளார்.

சாதம், பிரியாணி, புளியோதரை, தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், அவியல், கூட்டு, பொரியல், அப்பளம், வடகம் வடை, பாயாசம், ஜிலேபி, மைசூர் பாக்கு, லட்டு, பூந்தி, வெற்றிலை பஜ்ஜி, கீரை வடை, வெங்காய வடை, வெங்காய பஜ்ஜி, தயிர் மோர் என்று அந்த பட்டியல் நீளமாக சென்றுள்ளது.

இந்த விருந்தை சற்றும் எதிர்பார்க்காத ப்ரித்வி, மாமியார் சமைத்த அத்தனை உணவுகளையும், கொஞ்சம், கொஞ்சமாக எடுத்து ருசித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.