கேங்டாக்

சிக்கிம் மாநில பனிப்பொழிவில் சிக்கிய 800க்கும் அதிகமான பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

சிக்கிம் மாநிலத்தின் கிழக்கு பக்தியில் ஏற்பட்ட பனிப்பொழிவு காரணமாக உயரமான பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவித்தனர்.  நேற்று இந்திய ராணுவத்தினர் இவர்களை மீட்டனர்.

இந்தப் பனிப்பொழிவில் பெண்கள், வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் உட்படச் சுற்றுலாப் பயணிகள் பலர் சிக்கித் தவித்தனர். அவர்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவத்தின் திரிசக்தி கார்ப்ஸ் படையினர் ஈடுபட்டனர்.

இந்தப் பணி நேற்று மாலை வரை மீட்புப்பணி தொடர்ந்தது மிட்கப்ப்ட்ட சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டு அவர்களுக்குத் தங்குமிடம், சூடான ஆடைகள், மருத்துவ உதவி மற்றும் சூடான உணவு ஆகியவை வழங்கப்பட்டன.

இந்திய ராணுவ வீரர்கள் மீட்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்காக ராணுவ வீரர்கள் தங்களுடைய முகாம்களை காலி செய்தனர்.  ராணுவ வீரர்கள் தங்களுக்கு அளித்த உடனடி உதவிக்குச் சுற்றுலாப் பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.