டோக்கியோ

புயல் காரணமாக ஜப்பான் நாட்டில் 500க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஜப்பானில் தெற்கு பகுதியில் கானுன் என்ற புதிய புயல் உருவாகி கடல் வழியாக நகர்ந்து ஒகினாவா மற்றும் அமாமி பகுதியில் கரையைக் கடந்தது.  வானிலை ஆய்வு மையம் அப்போது198 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.

மேலும் கனமழை பெய்யும் அபாயம் உள்ளதால் அங்குத் தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.  கானுன் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன் தினம் 264 விமானங்கள் ரத்து செய்யப்பட்டநிலையில் நேற்று 500-க்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் இதனால் கடுமையான பாதிப்புக்குள்ளாக்கினர். இப்போது, சூறாவளி மிகவும் வலுவான நிலையில் உள்ளது. சூறாவளியின் மையப்பகுதியின் அழுத்தம் 935 ஹெக்டோபாஸ்கல்களை எட்டுகிறது.  காற்றின் வேகம் வினாடிக்கு 150 அடி, வினாடிக்கு 210 அடி வேகத்தில் வீசுகிறது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.