குந்தூஸ்

ப்கானிஸ்தானில் குன்ந்தூன் மாகாணத்தில் மசூதி ஒன்றில் நடந்த குண்டு வெடிப்பில் 100க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறுவதாக அறிவித்த பிறகு தாலிபான்கள் ஒவ்வொரு நகராக கைப்பற்ற தொடங்கினர்.  இறுதியாகத் தலைநகர் காபூலைக் கைப்பற்றிய தாலிபான்கள் நாட்டின் ஆட்சியைப் பிடித்துள்ளனர்.    இதையொட்டி பொதுமக்கள் நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

தற்போது அங்குக் கொடூர தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  அவ்வகையில் ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில்  உள்ள குந்தூஸ் மாகாணத்தில் மசூதி ஒன்றில் குண்டு வெடித்ததில் 100 பேர் பலியானதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுவரை இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.   ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் சமீப காலமாக அங்கு இத்தகைய கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது என்பதால் இந்த அமைப்பு மீது சந்தேகம் எழுந்துள்ளது..

அமெரிக்கா மற்றும் நேட்டோ கூட்டுப்படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய பிறகு  அங்கு நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.