ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்க இயக்குநரகம் (ED) சம்மன் அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

ஹைதராபாத்தின் வெங்கல் ராவ் நகரில் அமைந்துள்ள முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான சுரானா குழுமம் மற்றும் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் உள்ளிட்ட வேறு சில நிறுவனங்கள் தொடர்பான வழக்கில் மகேஷ் பாபுவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மீதான புகார் தொடர்பாக ஏப்ரல் 16 ஆம் தேதி செகந்திராபாத், ஜூபிலி ஹில்ஸ் மற்றும் போவன்பள்ளி ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

அதில் இந்த வழக்கில் தொடர்புடைய நிறுவனத்துடன் ₹5.9 கோடி மதிப்புள்ள பரிவர்த்தனைகள் குறித்து தகவல் பெற மகேஷ் பாபு அழைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏப்ரல் 28 ஆம் தேதி விசாரணை அதிகாரிகளின் முன் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.