பரபரப்பை ஏற்படுத்திய மோகன்ஜி இயக்கத்தில் உருவாகும் பகாசுரன் படத்தின் டைட்டில் லுக் வெளியானது.

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற படங்களின் மூலம் சினிமா காரர்களையும் ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.G

அதே நேரம், திரௌபதி, ருத்ரதாண்டவம் ஆகிய படங்கள் கடும் விமர்சனங்களையும் எதிர்கொண்டன.

அவர் அடுத்ததாக ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கும் படத்திற்கு “பகாசூரன்” என்று பெயரிட்டுள்ளார்.

பகாசுரன் என்பவன், மகாபாரத்தில் வரும் அசுரன். அவனால் ஒரு பிராமண குடும்பம் பாதிக்கப்பட, தருமர் சகோதரர்கள் உதவுகின்றனர்.

அதாவது பிராமணர்களுக்காக, சத்திரியர்கள் போராடுவதுதான் பகாசுரன் கதையாக இருக்கும் என கூறப்படுகிறது.

தவிர பகாசுரனாக, நாத்திகர்களை மோகன்ஜி உருவகப்படுத்தி இருக்கலாம் என்ற பரபரப்பும் ஏற்பட்டு உள்ளது.

இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கிறார். நட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தப்படத்தின் டைட்டிலுக்கு இன்று காலை 11 மணிக்கு வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்துவிட்டது இறுதிகட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்க இருக்கிறது.

வருகிற செப்டம்பர் மாதம் படத்தை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.