திருவனந்தபுரம்:
முகமது நபிகள் குறித்து நுபுர் சர்மா தெரிவித்த கருத்துக்கு பிரதமர் மோடியும் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அண்மையில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசிய பாஜக பெண் செய்தித்தொடா்பாளா் நூபுா் சா்மா, நபிகள் நாயகம் குறித்து ஆட்சேபத்துக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நுபுர் சர்மாவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில், டெல்லி பாஜகவை சேர்ந்த நவீன்குமார் ஜிண்டாலும் ட்விட்டரில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாகக் கருத்து பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து இந்த சர்ச்சை பூதாகரமாக வெடித்தது.

மூன்று நாள் பயணமாக கேரளா சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், முகமது நபிகள் குறித்து நுபுர் சர்மா தெரிவித்த கருத்துக்கு பிரதமர் மோடியும் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.