டில்லி:

இந்தியா வந்துள்ள நேபாள பிரதமர் சர்மா ஒலி பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

3 நாட்கள் அரசு முறை பயணமாக நேபாள பிரதமர் சங்மா ஒலி இன்று இந்தியா வந்தார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவரை நேரில் வரவேற்றார்.

இதை தொடர்ந்து பிரதமர் மோடியை, சங்மா ஒலி நேரில் சந்தித்து பேசினார். இதில் இரு நாட்டு உறவுகள் மேம்பாடு குறித்து விவாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.