பெலகாவி

பிரதமர் மோடி இன்று கர்நாடகாவில் 4 கூட்டங்களில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள 28 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு 2 கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது., நேற்று முன்தினம் முதல்கட்டமாக பெங்களூரு, மைசூரு உள்பட 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. வரும் 7 ஆம் தேதி 2-வது கட்டமாக 14 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது.

பிரதமர் முதல்கட்டத் தேர்தலுக்காக பெங்களூரு, மங்களூரு, சிக்பள்ளாப்பூர், மைசூருவில் பிரதமர் மோடி பொதுக்கூட்டங்களில் பங்கேற்றதுடன், வாகனப் பேரணியும் நடத்தி இருந்தார். தவிர 2-வது கட்ட தேர்தல் நடைபெற உள்ள சிவமொக்கா, கலபுரகி தொகுதிகளிலும் பிரதமர் மோடி பிரசாரம் செய்திருந்தார்.

இன்று ஒரே நாளில் பெலகாவி, உத்தரகன்னடா, தாவணகெரே, பாகல்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் பிரதமர் மோடி பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் செய்ய உள்ளதால் கர்நாடகாவில் அவர் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். நேற்று இரவில் பெலகாவி சாம்புரா விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வந்திறங்கி பெலகாவியில் உள்ள ஐ.டி.சி. ஓட்டலில் ஓய்வெடுத்தார்.

இன்று காலை 11 மணியளவில் பெலகாவி மாலினி சிட்டியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பெலகாவி மற்றும் சிக்கோடி தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேச உள்ளார். பிறகு பெலகாவியில் இருந்து மதியம் உத்தரகன்னடா மாவட்டம் சிர்சிக்கு அவர் செல்கிறார்.

மோடி இன்று மதியம் 1 மணியளவில் சிர்சியில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பாஜக வேட்பாளரை ஆதரித்து பேசியபிறகு, சிர்சியில் இருந்து தாவணகெரே மாவட்டத்திற்கு செல்ல உள்ளார். மதியம் 3 மணியளவில் தாவணகெரேவில் நடக்கும் பிரசார கூட்டத்தில் பங்கேற்று கூட்டம் நிறைவு பெற்றதும், தாவணகெரேயில் இருந்து பல்லாரி மாவட்டத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார்.

மாலை 6 மணிக்கு பல்லாரி மாவட்டம் ஒசப்பேட்டேயில் நடக்கும் பாஜக பொதுக் கூட்டத்தில் மோடி பங்கேற்று முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலுக்கு ஆதரவு திரட்ட உள்ளார். இன்று இரவு ஒசப்பேட்டேயில் உள்ள ஓட்டலிலேயே பிரதமர் மோடி தங்கி நாளை காலை 11 மணியளவில் ஒசப்பேட்டேயில் இருந்து பாகல்கோட்டைக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளார்.

பிறகு பாகல்கோட்டையில் மதியம் 12.15 மணியளவில் நடக்கும் பிரசார பொதுக் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். பிரதமர் வருகையையொட்டிமாநி6அம் எங்கும் பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.