சென்னை: திசை காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாயப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக இன்றுமுதல் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

வரும் 30-ந்தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், சென்னையில் இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

31ந்தேதி மற்றும் பிப்ரவரி 1ந்தேதி அன்று தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளிலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டமாகவே காண்ப்படும்

இன்று (28ந்தேதி) மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அங்கு செல்லும் மீனவர்கள் இன்று ஒரு நாளைக்கு எச்சரிக்கையுடன் சென்று வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.