புவனேஸ்வர்

பிஜூ ஜனதா தளம் கட்சியில் இருந்து அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர் பிரேமானந்த நாயக் விலகி உள்ளார்.

கடந்த 2014  ஒடிசா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. தனுர்ஜெய் சித்து டெல்கோய் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பிறகு அவர் காங்கிரசில் இருந்து விலகி பாஜவில் இணைந்தார். பிறகு. 2019 சட்டமன்ற தேர்தலில் பிரேமானந்த நாயக்கை எதிர்த்து டெல்கோய் தொகுதியில் போட்டியிட்டு இந்த முறையும் தோல்வியடைந்தார்.

பாஜகவில் இருந்து வெளியேறிய தனுர்ஜெய் சித்து, ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளம் கட்சியில் ஐக்கியமானார். கட்சியில் அவருக்கு  முக்கியத்துவம் கொடுப்பதைச் சட்டமன்ற உறுப்பினர் பிரேமானந்த நாயக் ஏற்கவில்லை. ஆயினும் அவரது விருப்பத்திற்கு மாறாக தனுர்ஜெய் சித்துவுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. எனவே அதிருப்தியில் இருந்த பிரேமானந்த நாயக், கட்சியில் இருந்து விலகியிருக்கிறார்..

அவர் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு இ-மெயில் மூலம் கடந்த அக்டோபர் மாதம் கடிதம் அனுப்பியிருக்கிறார். அதில் கட்சியில் தான் புறக்கணிக்கப்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாகக் கூறியுள்ளார்.

இரண்டு முறை டெல்கோய் தனி தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரேமானந்த நாயக். 2019 முதல் 2022 வரை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.