க்னோ

த்திய அரசு முன்னாள் பிரதமர் சரண்சிங் குக்கு பாரத ரத்னா அறிவித்ததும் அவர் பேரன் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுக்கு வந்துள்ளார். 

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. தேர்தல் பணியை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து அமைத்துள்ள ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. அது மட்டுமின்றி கூட்டணியில் கட்சிகள் இணைவதும், வெளியேறுவதுமாக இருப்பதால் அரசியல் களம் விறுவிறுப்பாகி வருகிறது.

இந்தியா கூட்டணியில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராஷ்டிரிய லோக தளம் கட்சி இடம் பெற்றிருந்தது.  கட்சியின் தலைவராக ஜெயந்த் சவுதிரி செயல்பட்டு வருகிறார். இங்கு இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பிரச்சினை நீடித்து வரும் நிலையில் ராஷ்டிரிய லோக் தளம் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. மேலும் சமாஜ்வாதி கட்சியுடன் ராஷ்டிரிய லோக் தளம் கட்சிக்கு முரண்பாடு நிலவி வந்தது.

இன்று ராஷ்டிரிய லோக் தளம் கட்சித் தலைவர் ஜெயந்தி சவுதிரியின் தாத்தாவும், முன்னாள் பிரதமருமான சரண் சுங்கிற்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்தது.  சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களில் ராஷ்டிரிய லோக் தளம் கட்சி இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது.

இதை உறுதிப்படுத்தியுள்ள ராஷ்டிரிய லோக் தளம் தலைவர் ஜெயந்த் சவுதிரி,

”பாஜக. கூட்டணி அழைப்பை என்னால் நிராகரிக்கமுடியவில்லை. வேறு எந்த அரசியல் கட்சியாலும் செய்யமுடியாத பணிகளை பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை செய்துள்ளது”

என்று கூறியுள்ளார்.