சென்னை
க்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் தோற்றால் மாவட்டச் செயலாளர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவர்   என மு க ஸ்டாலின் எச்சரித்துள்ளார் .
இன்று திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்களுடன் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி உள்ளார்  மக்களவை தேர்தல் குறித்து,ம் தேர்தல் பணிகள் குறித்ததும்  கூட்டத்தில் ஆலோசனை நடந்துள்ளது.
 அப்போது மு க ஸ்டாலின்,
“நம்மை மக்களவை தேர்தல் எதிர்நோக்கி வந்து கொண்டு இருக்கிறது.  எனவே நாம் சரியானபடி கடமை ஆற்றி வெற்றி பெற வேண்டியது அவசியமாகும்.  மக்களவை தேர்தலில் எந்த ஒரு தொகுதியிலும் திமுக வேட்பாளர் தோற்கக்கூடாது.  
எந்த ஒரு தொகுதியில் திமுக வேட்பாளர் தோல்வி அடைந்தால் அந்த மாவட்டச் செயலாளர் பதவி நீக்கம் செய்யப்படுவார்.  இதைப் போலத் தொகுதி பார்வையாளர்களுக்குச் சரியான ஒத்துழைப்பு தராத  மாவட்டச் செயலாளர்களும் மாற்றம் செய்யப்படுவார்கள்”
என எச்சரிக்கை விடுத்துள்ளார்.