சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் NOTA பட்டன் மிஸ்ஸிங் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையைகி உள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம்  நடவடிக்கையை அறப்போர் இயக்கம் கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும், அரசின் அழுத்தங்களுக்கு இடம் கொடுக்காமல் சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமையை நிலை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.

“நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு இயந்திரத்தில் NOTA Button வைக்காதது, ரகசியமாக அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் அடிப்படை உரிமையை குடிமக்களிடம் இருந்து பறிக்கும் செயல்”  என கடுமையாக சாடியுள்ளது.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகளில்  12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது.  அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.  ஆனால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா வசதி இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.

அதுகுறித்த்த செய்தியாளர்களை சந்தித்த அறப்போர் இயக்க நிர்வாகிகள்,  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரையும் நிராகரிக்கும் வகையில் நோட்டா (NOTA – None of the above) வசதி தேவை. இதுதொடர்பாக பல ஆண்டுகளாக குரல் எழுப்பட்டதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த 2013ம் ஆண்டு சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, தேர்தலிலும் போட்டியிடும், யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற வகையில் ஒரு பட்டனை தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரத்தில் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதன்படி கடந்த 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முதன் முறையாக நோட்டா வசதி வாக்குப்பதிவு இயந்திரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட முதல் தேர்தலிலேயே நோட்டாவுக்கு 60 லட்சம் வாக்குகள் நாடு முழுவதும் கிடைத்தன. அதாவது 1.1 சதவீத வாக்குகள் இதில் பதிவானது.

தமிழகத்தில் முதன் முறையாக 2013 ஏற்காடு இடைத்தேர்தலில் நோட்டா வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் மாநில  சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா வசதி உள்ளது. ஆனால்,  தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இதில் நோட்டா பட்டன் வைக்கப்படவில்லை.

மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலில் நோட்டா வசதி உள்ளது. தேர்தலில் நோட்டா வெற்றி பெற்றால், மீண்டும் மறுத்தேர்தல் நடத்தப்படும் என்று அங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல ஹரியாணாவிலும் உள்ளது. அண்மையில் ஒடிஷாவிலும் உள்ளாட்சித் தேர்தலில் நோட்டா வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே மாநில தேர்தல் ஆணையம் அரசின் அழுத்தங்களுக்கு இடம் கொடுக்காமல் சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமையை நிலை நிறுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அறப்போர் இயக்கம், மாநில தேர்தல் ஆணையத்துக்கு புகார் மனுவை அனுப்பி இருப்பதாகவும்,  அந்த மனுவில், “வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு இயந்திரத்தில் NOTA button வைக்காதது, ரகசியமாக அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் அடிப்படை உரிமையை குடிமக்களிடம் இருந்து பறிக்கும் செயல். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உச்சநீதி மன்ற தீர்ப்பை மீறும் செயலாகும். இந்த NOTA button உடனடியாக கொண்டு வரப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

தேர்ர்தலுக்கு இன்னும் 4 தினங்களே உள்ள நிலையில், இந்தப் புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், ஏற்கனவே சென்னை மாநகராட்சி ஆணையரும், சென்னை மாநகர தேர்தல் அலுவலுமான ககன்தீப் சிங் பேடி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நோட்டா சின்னம் கிடையாது என்று கூறியிருக்கிறார்.  வழக்கமாக எம்பி, எம்எல்ஏ தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்றால், வாக்காளர்கள் நோட்டாவிற்கு வாக்களிக்க வசதி இருக்கும். ஆனால், தற்போது மாநில தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் உள்ளாட்சி தேர்தல் என்பதால், நோட்டா சின்னம் கிடையாது என்று விளக்கம் அளித்தார். அதுபோல,  யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் விவி பேட் கருவியும் இத்தேர்தலில் பயன்படுத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.