பர்மிங்காம்:
காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கம் வென்றார்.

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது.

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் இரண்டாம் நாளான இன்று பளுதூக்குதல் போட்டி நடைபெற்றது. காமல்வெல்த் போட்டியின் இந்தியாவின் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். காமன்வெல்த் பளுதூக்குதலில் இந்தியா ஒரேநாளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களை வென்றுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெறும் காமல்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் தங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.