மும்பை:
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடர் விரைவில் நடைபெறவுள்ளது.
இந்தத் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. 15 வீரர்களின் பெயர் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

ஜிம்பாப்வேவுக்கு இந்திய அணி சுற்றுப் பயணம் செல்கிறது.

ஆகஸ்ட் 18ம் தேதி முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 20 மற்றும் ஆகஸ்ட் 22 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த ஒரு நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில், அந்த தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியை ஷிகர் தவன் வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.