பெங்களூரு: கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் அமைச்சரவையில் இன்று 29 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

கர்நாடக பாஜகவில் எழுந்த உள்கட்சி பூசல் காரணமாக,  முதலமைச்சராக இருந்த எடியூரப்பா, கடந்த வாரம் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதையடுத்து,  புதிய முதலமைச்சராக மேலிடப் பார்வையாளர்கள் முன்னிலையில், பசவராஜ் பொம்மை  தேர்வுசெய்யப்பட்டார்.

இதையடுத்து கடந்த ஜூலை 28-ஆம் தேதி பசவராஜ் பொம்மை அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்றார். அதையடுத்து, பதவிக்கான பெயர் பட்டியல் இறுதி செய்ய கடந்த சில நாட்களாக டெல்லி முகாமிட்டிருந்தார். இந்த நிலையில், இன்று மதியம் கர்நாடக ஆளுநர்  மாளிகையில் எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

அதன்படி, புதிய அமைச்சர்களாக  வி.சோமன்னா, உமேஷ் கட்டி, அங்காரா, ஜே.சி.மதுசுவாமி, அராகா ஜனேந்திரா, அஸ்வந்த் நாராயன், சி.சி.பாடில் உள்பட 29 பேர் அமைச்சர்களாக  பதவி ஏற்றனர். அவர்களுக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.