சென்னை

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கொரோனாவில் இருந்து குணம் அடைய சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாளை தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் நேற்று இரவு 7 மணியுடன் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றது.   இந்த தேர்தலில் திமுக அணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல கட்சிகள் இடம் பெற்றுள்ளன.  திமுக தலைவர் மு க ஸ்டாலின் உள்ளிடோர் பரப்புரை செய்து வந்தனர்.

அவ்வகையில் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி மாநிலம் எங்கும் தீவிர பிரசாரம் செய்து வந்தார்.  அவருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது.  இதையொட்டி கனிமொழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தனது சமுக வலைத் தள பதிவில், “திமுக எம்பி கனிமொழி கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தகவல் அறிந்து நான் வருத்தம் கொண்டேன். அவர் விரைவில் பரிபூரண நலம் பெற வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன்” எனப் பதிந்துள்ளார்.