சென்னை: தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசனின் தாயார் காலமானார். அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

தமிழக சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன். அவரின் தாயார் ராசாமணி (வயது 83)  வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு காலமானார்.

இதையறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேரில் சென்று திருமதி. ராஜாமணி அம்மாள் அவர்களின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். முதல்வருடன் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு,திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோரும் கலந்து கொண்டு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

ராஜாமணி அம்மாள் மறைவுக்கு  திமுக பிரமுகர்கள், தொண்டர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.