அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது என்று காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதயத்தில் நான்கு இடங்களில் அடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இதனையடுத்து காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இன்று அதிகாலை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது. புதிய ரத்த நாளம் மூலம் இருதய தமணியில் ஏற்பட்ட அடைப்பு சரி செய்யப்பட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், “இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் இருந்த 4 அடைப்புகள் அகற்றப்பட்டுள்ளன. அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது, சிறப்பு இருதய தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சரின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.