திருச்சி

தமிழக அமைச்சர் ரகுபதி சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 25 ஆம் தேதி தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சென்னையில் இருந்து விமானத்தில் திருச்சிக்கு வந்தார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து தனது சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு காரில் செல்ல முயன்றபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

எனவே அவர் உடனடியாக திருச்சி காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அமைச்சர் ரகுபதிக்கு 2 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சை முடிந்து அவர் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு வீடு திரும்பினார். அமைச்சர் தற்போது நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.