ன்னியாகுமரி

பாஜகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் கடுமையாகச் சாடி உள்ளார்.

இன்று கன்னியாகுமரியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அந்த சந்திப்பில் அமைச்சர்,

”சென்னையில் அம்பத்தூர், மாதவரம், அண்ணாநகர், அண்ணாநகர் கிழக்கு, பெசன்ட் நகர், சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம், மயிலாப்பூர் ஆகிய ஆவின் மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும்.  

வெள்ளப்பெருக்கின் போது ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டதாகக் கூறுவதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தபோது நாங்கள் களத்தில் நின்று பணியாற்றினோம், இன்று குறை கூறுபவர்கள் யாரும் களத்தில் இல்லை. 

பாஜகவுடன் இணையும் நோக்கம் சமக தலைவர் சரத்குமாருக்கு உள்ளதால் தான் பிரதமர் மோடியால் இந்தியாவிற்கே பெருமை என்ற கருத்தைக் கூறி உள்ளார். ஆசியாவின் ஜோதி என்று உலக நாட்டு மக்களால் போற்றப்பட்ட ஜவஹர்லால் நேரு, உலக சமாதானத்தைப் பற்றி பேசினார். ஆனால் பாஜக அரசு உள்ளூர் சமாதானத்தைப் பற்றிக் கூட பேசவில்லை. 

ஒரு மதத்தை மையப்படுத்தி வாக்கு வங்கியை ஒருங்கிணைக்கும் ஒருவரால் எப்படி ஆசிய ஜோதி போன்ற பட்டத்தைப் பெற முடியும் ?. தனக்கென கொள்கை இல்லாத கட்சிகள் தான் பாஜகவுடன் கூட்டணி வைக்கும்; எனவே கொள்கை உள்ள கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி வைக்காது.” 

என்று தெரிவித்துள்ளார்.