சென்னை:

மைச்சர் மணிகண்டனுக்கு மனநலம் சரியில்லை என்றும் அவரை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மணிகண்டன், “அ.தி.மு.க. கரை வேட்டியை அ.தி.மு.க.வினர் மட்டுமே கட்ட வேண்டும். டி.டி.வி. தினகரன் தரப்பினர் அந்த கரைவேட்டியை கட்டக்கூடாது. அப்படி கட்டினால் காவல்துறையில் புகார் கொடுங்கள். அவர்களை உள்ளே வைக்கிறேன். தவிர, அந்த வேட்டியை கட்டினால் அவர்களது வேட்டியை உருவுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று பொதுக்கூட்ட மேடையில் தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த டி.டி.வி. தினகரன், “ஆட்சி பறிபோய்விடுமோ என்ற பயத்தில் ஏதேதோ பேசுகிறார்கள். மணிகண்டனுக்கு மனநிலை சரியில்லை. அவரை கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும்” என்று கூறினார்.