மராவதி

மிக்ஜம் புயல் தெற்கு ஆந்திராவில் கரையை கடந்தது.

கடந்த 27 ஆம் தேதி வங்கக்கடல் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது. இதற்கு மிக்ஜம் என பெயரிடப்பட்டது. இந்த புயலால் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன் தினம் முதல் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

மிக்ஜம் புயல் சென்னைக்கு கிழக்கு – வடகிழக்கே வங்கக்கடலில் நிலைகொண்டு வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக மாறி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நிலை கொண்டிருந்தது.

இன்று மாலை தெற்கு ஆந்திராவில் நிலைகொண்டிருந்த மிக்ஜம் தீவிர புயலாக கரையை கடந்தது. இது தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டிய பாபட்லா பகுதியில் கரையை கடந்தது. அந்த நேரத்தில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மிக்ஜம் புயல் அடுத்த 2 மணிநேரத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வலுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.