டெல்லி: பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பையும் அதன் துணை அமைப்புகளையும் இந்திய அரசு கடந்த ஆண்டு தடை செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில்,லஷ்கர்-இ-தொய்பாவின் என்ற பயங்கரவாத அமைப்பின்  பினாமி அமைப்பான டிஆர்எப் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்டு உள்ளது. இதற்காக அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.

மத்தியஅரசு கடந்தஆண்டு (2021) செப்டம்பர் மாதம் பி.எப்.ஐ., எனப்படும் ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’  உள்பட அதன் துணை அமைப்புகள் 5 ஆண்டுகள் தடை செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. அப்போது,  பிஎஃப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகள் நாட்டின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் பாதுகாப்பை குலைக்கும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டில் தீவிரவாதத்தை ஆதரித்து அமைதியை குலைக்கும் முயற்சியாக இது உள்ளது.
பிஎஃப்ஐ அமைப்பின் நிறுவனர்கள் சிலர் சிமி அமைப்பின் தலைவர்களாக உள்ளனர். அதேபோல அவர்களுக்கு வங்கதேசத்திலிருந்து செயல்படும் ஜமாத் உல் முஜாஹிதீன் அமைப்புடன் தொடர்புள்ளது. இவை இரண்டுமே தடை செய்யப்பட்ட அமைப்புகள்.

பிஎஃப்ஐ அமைப்பின் துணை அமைப்புகளான, ரிஹாப் இந்தியா பவுண்டேஷன் (ஆர்ஐஎஃப்), கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (CFI), அனைந்திய இமாம் கவுன்சில், நேஷனல் கான்ஃபெடரேஷன் ஆஃப் ஹியூமன் ரைட்ஸ் ஆர்கனிசேஷன்ஸ், நேஷனல் வுமன்’ஸ் ஃபிரண்ட், ஜூனியர் ஃபிரண்ட், எம்பவர் இந்தியா ஃபவுண்டேஷன், ரஹப் பவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் 5 ஆண்டு காலத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது, பாகிஸ்தானைச் சேர்ந்த  பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் பினாமி அமைப்பான டிஆர்எப் பயங்கரவாத அமைப்பு என குற்றம் சாட் உள்துறை அமைச்சகம்  அதையும் தடை செய்து அறிவித்து உள்ளது.

டிஆர்எப் பயங்கரவாத அமைப்பு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (உபா) கீழ் பயங்கரவாத அமைப்பாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,    2019 இல் தொடங்கப்பட்ட டிஆர்எப் பயங்கரவாத நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக ஆன்லைன் ஊடகம் மூலம் இளைஞர்களை இந்த அமைப்பு சேர்த்து வருகிறது. பயங்கரவாத நடவடிக்கைகள், பயங்கரவாதிகளின் ஆட்சேர்ப்பு, பயங்கரவாதிகளின் ஊடுருவல் மற்றும் பாகிஸ்தானில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் ஜம்மு-காஷ்மீர் மக்களை இந்திய அரசுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளில் சேர தூண்டுவதற்காக சமூக ஊடக தளங்களில் உளவியல் நடவடிக்கைகளில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது என கூறப்பட்டு உள்ளது. டிஆர்எப் தலைவர் ஷேக் சஜ்ஜத் குல் உபா சட்டத்தின் இன் கீழ் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர் ஆவார் என்றும் குறிப்பிட்டுள்ளது.