சென்னை: மேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஷெகாவத்தை, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நாளை சந்திக்கிறார். ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் 21ந்தேதி, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி குழு சந்தித்து பேசியது.

காவிரியில் மேகதாது அணையை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதுகுறித்து காவிரி மேலாண்மை கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இதற்கு தமிழகஅரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், மேகதாது அணை விவகாரம் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மேகதாது அணை குறித்து வரும் 22ந்தேதி நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில்  விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படு கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நாளை டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்து மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவதற்கு அனுமதி தரக்கூடாது என வலியுறுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.