சென்னை:
மிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

தமிழகத்தில், 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டு விட்டதால், வாரந்தோறும் நடந்து வந்த மெகா தடுப்பூசி முகாம் நிறுத்தப்பட்டது. வழக்கமான மையங்களில் மட்டும், தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது.

கொரோனா பரவல் அதிகரித்ததால் மீண்டும் மெகா தடுப்பூசி முகாமை நடத்த மக்கள் நல்வாழ்வுத்துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி, 31வது மெகா தடுப்பூசி முகாம், ஒரு லட்சம் இடங்களில் நாளை நடைபெற உள்ளது.