டெல்லி: இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதலாமாண்டு வகுப்புகளை நவம்பர் 15ந்தேதி தொடங்க வேண்டும் என அகில இந்திய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கனா நீட் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியான நிலையில், மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக  அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில ஒதுக்கீடுகளுக்கான மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் தனித்தனியே தொடங்கியுள்ளன.

இந்த நிலையில், முதலாண்டு எம்பிபிஎஸ் வகுப்புகளை நவ.15-ம்தேதி தொடங்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு,  “அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிந்தவுடன் தமிழகத்தில் கலந்தாய்வு தொடங்கும் என்றும், அதனால், மத்தியஅரசு அறிவித்துள்ளபடி நவம்பர் 15ந்தேதி  முதலாண்டு எம்பிபிஎஸ் வகுப்புகளை தொடங்க தயாராக உள்ளோம் என்றார்.