க்னோ

பாட்னாவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக மாயாவதி அறிவித்துள்ளார்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும் பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் ஒன்று திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் இதையொட்டி நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.  நாளை பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில்  பாஜகவை எதிர்க்கும் சுமார் 20 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.  நகர் முழுவதும் பாட்னாவுக்கு வரும் எதிர்க்கட்சி தலைவர்களை வரவேற்க சுவரொட்டிகள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. நாளை மதியத்துக்குள் பெரும்பாலான தலைவர்கள் பாட்னா சென்று சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பீகார் மாநிலத்தில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாகப் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். மேலும் சிரோமணி அகாலிதளம், பாரத் ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து தங்களது நிலைப்பாட்டை இதுவரை தெரிவிக்கவில்லை.