றுபடை வீடுகளில் இரண்டாம் படையான செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் மாசித் திருவிழாவையொட்டி இன்று கொடியேற்றப்பட்டது.

இதை முன்னிட்டு, கொடிப்பட்டம் யானைமீது ஊர்வலமாக ரதவீதிகள் வழியாக எடுத்து வரப்பட்டு ஆகம முறைப்படி கொடி ஏற்றப்பட்டது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் பிரசித்தி பெற்றது மாசி திருவிழா. 12 நாட்கள் நடைபெறும் மாசித்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று  அதிகாலை 1 மணிக்கு கோவிலின்  நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அதிகாலி 1.30 மணிக்கு விஸ்வரூபம் தரிசனம்,  அதிகாலை  2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து காலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் கும்ப லக்கனத்தில் கொடிமரத்தில் பக்தர்களின் ” முருகனுக்கு அரோகரா, கந்தனக்கு அரோகரா” கோஷத்துடன் கொடியேற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

வரும் 24-ம் தேதி ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது.

26-ம் தேதி ஏழாம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் சுவாமி சண்முகரின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 9 மணிக்கு மேல் ஆறுமுகநயினார், வெற்றி வோ சப்பரத்திலும், மாலை 4.30 மணிக்கு மேல் சிவன் அம்சத்தில் தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்திலும் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

27ம் தேதி எட்டாம் திருவிழாவைக் காலை 11.30 மணிக்கு சுவாமி விஷ்ணு அம்சத்தில் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

மார்ச் 1-ம் தேதி 10-ம் திருவிழா அன்று திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது.

மார்ச் 2-ம் தேதி பதினொன்றாம் திருவிழாவை முன்னிட்டு இரவு தெப்பத்திருவிழா நடக்கிறது.

மார்ச் 3-ம் தேதி 12-ம் நாள் திருவிழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.

திருவிழாவை முன்னிட்டு வரும் 20 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அதிகாலை 1 மணிக்கும், 21, 23 மற்றும் 24-ம் தேதிகளில் அதிகாலை 4 மணிக்கும் நடை திறக்கப்படுகிறது.

திருவிழாவின் மற்ற நாள்களில் கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டுத் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகின்றன.

மாசித் திருவிழாவையொட்டி கோவிலில் பலத்த பாதுகாப்பு வசதிகளும், சிறப்பு பஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.