இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நிர்ணயித்த 370 ரன்கள் என்ற இலக்க‍ை நோக்கி ஆடிவரும் தென்னாப்பிரிக்க அணி, 3 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியின் துவக்க வீரர் எய்டன் மார்க்ரம் 107 ரன்களை அடித்து ஆடிவருகிறார்.

தற்போதைய நிலவரப்படி, 62 ஓவர்களில் 137 ரன்களை எடுக்க வேண்டிய நிலையிலுள்ளது தென்னாப்பிரிக்க அணி. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா வென்றால், டெஸ்ட் தொடரை சமன்செய்யலாம். ஏனெனில், முதல் போட்டியில் பாகிஸ்தான் வென்றுள்ளது.

வான் டெர் டுசேன் 48 ரன்கள் அடித்து அவுட்டானார். தற்போது மார்க்ரம் உடன் ஜோடி சேர்ந்து ஆடிவரும் பவுமா அரைசதம்(52) அடித்து ஆடிவருகிறார். இன்று காலையில் ஆட்டம் துவங்கியவுடன், டெர் டுசேன் மற்றும் டூ பிளசிஸ் விக்கெட்டுகளை இழந்தது தென்னாப்பிரிக்கா.

ஆனாலும், மார்க்ரம் மற்றும் பவுமா ஆகியோர் நிலைத்து நின்று ஆடி, அந்த அணிக்கு வலுவான அடித்தளம் இட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் ஹசன் அலிக்கு இன்று காலையில் 2 விக்கெட்டுகள் கிடைத்தன.