இயக்குநர் ராமிடம் உதவியாளராக இருந்த மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, மாரி செல்வராஜின் மனைவி திவ்யாவுக்கு வளைகாப்பு நடந்தது. அந்தப் படம் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் தற்போது

இந்தத் தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. கையில் குழந்தையை வைத்திருக்கும் மாரி செல்வராஜின் படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தவிர இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.