விருதுநகர்: மார்கழி மாத பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு,  சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் கோடியருகே மேற்பகுதி தட்டையான, சதுர வடிவிலான நான்கு மலைகள் உண்டு. நான்கு வேதங்களே சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தர்கிரி என்ற பெயர்களில் மலைகளாகி நிற்க, அவற்றின் நடுவில் கம்பீரமாக அமைந்திருக்கிறது சதுரகிரி மலை.  மூலிகைகள் நிரம்பிய மலையின் மேல் சிவபெருமான் வீற்றிருக்கிறார். சதுரகிரியை அகஸ்தியர் உள்ளிட்ட சித்தர்கள், பஞ்சபூத லிங்கம் என்பர். இந்த மகாலிங்க மலையை ‘சித்தர்கள் வாழும் பூமி’ என்று அழைக்கின்றனர்

இந்த மலையானது, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ‘தரைமட்டத்தில் இருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது இங்குதாரன் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.  இங்கு குடிகொண்டுள்ளார் சுந்தர மகாலிங்கப் பெருமானார். இந்த பகுதியானது, சதுராசலம், சித்தர்கள் தேசம், சிவன்மலை, மூலிகைவனம் என்று பெரியோர்களால் போற்றப்படுகிறது.

 இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் மாதந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

இந்நிலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மார்கழி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியையொட்டி வருகிற 7-ந் தேதி முதல் 7-ந்தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படுவதாக  விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. . ஆனால், நீரோட்டையில் குளிப்பதற்கும், இரவில் கோயிலில் தங்குவதற்கு அனுமதி இல்லை என வனத்துறை அறிவித்துள்ளது.