பனாஜி:

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மீண்டும் கோவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவோ உடல்நலக் குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பிய நிலையில் தற்போது மீண்டும் கோவா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கணைய அலர்ஜி நோய் மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவா முதல்வர் கடந்த 22ந்தேதி  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு கோவா திரும்பினார்.

அதைத்தொடர்ந்து சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த அவர், தொடர்ந்து   அமைச்சரவை கூட்டத்தையும் கூட்டி ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் உடல்நலக்குறைவு காரணமாக கோவா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவலை உறுதிசெய்துள்ள  கோவா சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரானே,  பாரிகர், உடலில் நீரிழிப்பு மற்றும் வயிற்று வலி  காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவரை கவனித்துக்கொள்ள சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும்  கூறி உள்ளார்.

பாரிக்கருடன் அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் உள்ளனர்.