திருவனந்தபுரம்

ஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குநர் சிதம்பரம் பொடுவால் மீது நடிகை பிராப்தி பாலியல் குற்றச்சாட்டை எழுப்பி உள்ளார்.

பிரபல மலையாள இயக்குநர் சிதம்பரம் பொடுவால் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படமான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’. படத்தில் நடிகர்கள் சவுபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்திற்குத் தமிழகத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

படத்தின் இயக்குநரை நடிகர் கமல்ஹாசன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விக்ரம், தனுஷ் உள்ளிட்டோர் நேரில் அழைத்து பாராட்டினர்.

இந்த படத்தின் இயக்குநர் சிதம்பரம் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமூக ஊடகம் வழியே நடிகை பிராப்தி எலிசபெத் என்பவர் இந்த குற்றச்சாட்டை வழியே தெரிவித்து உள்ளார்.

நடிகை பிராப்தியை இன்ஸ்டாகிராமில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்பற்றுகின்றனர். அவர் வெளியிட்ட பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பிராப்தி வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், அந்த இயக்குநரிடம் வாட்ஸ்அப் தகவல்கள் உள்ளன என்றும் தகவல்களிலேயே ஒரு நாள் இரவு முழுவதும் செலவிடப்பட்டது என்றும் மறைமுக குற்றச்சாட்டையும் பதிவிட்டு உள்ளார்.

அவர்,

“ஆணின் குற்றம் சாட்டும் விரலானது, ஒரு பெண்ணை நோக்கியே எப்போதும் இருக்கும். அந்த ஆண் ஏன் அப்படி செய்துள்ளார்? என்பது உங்களுக்கு விசயமல்ல.

அவரை பற்றி வெளியே கூறும்போது, அதில் எனக்கு எந்த வலியும் இல்லையே என்றே அவர்கள் பார்க்கின்றனர். சரி. நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு கூறுங்கள்”

 எனப் பதிவிட்டிருக்கிறார்.

கட்ந்த 2021-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஜானேமன் படத்தில் பிராப்தி நடித்திருக்கிறார். இயக்குநர் சிதம்பரத்துக்கு இது அறிமுக படமாகும்., ஊபர், அஜியோ, பிரிட்டானியா உள்ளிட்ட பல்வேறு விளம்பர படங்களிலும் பிராப்தி நடித்துள்ளார்.