சென்னை: சென்னையில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய நிவாரண நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

புயல் பாதிப்பு குறித்த சென்னையின் பல இடங்களில் ஆய்வு செய்த முதலமைச்சர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மக்கள் பாதுகாக்கப்பட்டுள்னர் என சென்னை காசிமேட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். புயல், மழை பாதிப்புகளை அகற்ற பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு நன்றி. மாண்டஸ் புயல் தாக்கத்தில் இருந்து சென்னை முழுவதுமாக மீண்டுள்ளது. மழை அதிமாக பெய்தாலும் பாதிப்பு குறைவாகவே இருக்கிறது. அனைத்து பகுதிகளிலும் வாகன போக்குவரத்து தடையின்றி செயல்படுகிறது. மக்களின் ஒத்துழைப்பால் தான் பெருமளவு பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. மழை பாதிப்புகள் ஆய்வு செய்யப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சென்னை தலைமைச்செயலகத்தில்,  தமிழகத்தில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், ஆலோசனை மேற்கொண்டார்